மாடித்தோட்டம்
நகர்ப்புறவாசிகள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டிலும் சொந்த காய்கறிகளை கூரை மேல் அல்லது பொதுவான திறந்தவெளியில் தோட்டம் அமைத்து வளர்க்கலாம் மாடித்தோட்டம் அமைப்பதன் மூலம் செடிகளில் நீராவிப் போக்கு நடைபெற்று, வெப்ப நிலையைக் குறைக்க வழி வகுக்கிறது. இதனால் செடிகளைக் கொண்டுள்ள கட்டிடங்கள், இவை அல்லாத கட்டடங்களை விட குளிர்ச்சியாக இருக்கும்.தோட்டம் வளர்ப்பு என்பது, பயனுள்ள பொழுதுபோக்கு மற்றும் உடற்பயிற்சி மட்டுமின்றி, மன அழுத்தத்தையும் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.நமக்குத் தேவையான காய்கறிகளை, நாமே விளைவித்து சாப்பிடுவதில் கிடைக்கும் திருப்தியும், சந்தோஷமும் தனி தான்.
மாடித் தோட்டம் அமைப்பது எப்படி?
முடிந்தளவு புதிய பொருட்களை வாங்காமல், வீட்டிலிருக்கும் மண் தொட்டி, பானை, வாட்டர் பாட்டில், பால் போடும் கிரேடுகள், பழைய வாளி, கெட்டியான பாலிதீன் பைகள், அரிசி சாக்கு ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.அதில், நீர் செல்ல சிறு துவாரம் இட வேண்டும்.